சித்த மருத்துவம் எம்மை பற்றி
தமிழர்கள் மேற்கொண்டிருந்த உணவு முறையாலும் மருந்து முறையாலும், ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ எனக் கண்டறிந்து, அவ்வகையான உணவு முறைகளை உள்ளடக்கியது “சித்தமருத்துவம்’. சித்த மருத்துவ நூல்கள் தமிழில் மட்டுமே அதிகமாகக் காணக் கிடைப்பதனாலும், சித்த மருத்துவமுறை பண்டைய நாள் முதல் இன்றுவரை தமிழ் நாட்டிலேயே பயிலப்பட்டு வருவதனாலும் சித்த மருத்துவத்தைத் தமிழ் மருத்துவம்’’ என்பர்.
சித்த மருத்துவம், தமிழ் மருத்துவம் என்பதற்குச் சில அடிப்படை ஒற்றுமைகள் காணப்படுகின்றன. தமிழக நிலத்துக்கு உரிமையுடைய மூலிகை வகைகள், மலைப் பகுதிகளிலும், காடுகளிலும், நீர்ப் படுகைகளிலும் காணப்படுகின்ற செடி, கொடி, மரவகைகள், சித்த மருத்துவத்தின் அடிப்படை மருந்துப் பொருள்களாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. சித்த மருத்துவத்தின் ‘மூலச் சுவடிகள்’ அனைத்தும் தமிழில் அமைந்திருப்பதுடன் அவை தமிழகத்திலேயே வழங்கியும் வருகின்றன.
நான் மூண்டறம் தலை முறை வைத்தியர் என் முன்னோர்கள் வைத்திய நூல்களில் கற்று தேர்ந்து வைத்திய சாஸ்த்ரங்களை கற்று அறிந்து பற்பல சாஸ்த்திர கோர்வையிலருந்து சுருணம் மெழுகு செந்தூரும் பசபம் ஜெயநீர் மாத்திரை இவை சாஸ்த்திர படி கைபாகம் செய்பாகம் புடம்பாகம் எரி பாகம் பல பரிகாரம் கற்று உணர்ந்து 4448 வியாதிகளை எளிதில் உன்னுரும் படியான நாடி,நீர் குறி ,மல குறி ,முதலிய (8)அஸ்டவித பரிட்சை,பயிற்ச்சி பெற்று மருந்து செய்கிறேன
2024. All Rights Reserved. PRAGHADHESHWARAN